சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 31 இந்திய மீனவர்கள் கைது

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 31 இந்திய மீனவர்கள் கைது

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 31 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகர் கடற்பரப்பில் அவர்கள் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 03 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட மீனவர்களை யாழ்ப்பாணம் மாவட்ட நீரியல்வள திணைக்களத்தினர், கடற்படையினரிடமிருந்து பொறுப்பேற்று, அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This