யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த இருவரும் 20 கிராம் ஐஸ் போதை பொருளுடன் கைது செய்யபட்டுள்ளனர்.

சுமார் 25 மற்றும் 23 வயதுடைய சந்தேக நபர்கள் கைதான சமயம் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுத்து தப்பிக்கவும் முயற்சி மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம் குறித்த இருவருள் ஒருவர் வன்முறை கும்பல்களுடன் தொடர்புடையவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரிடமிருந்து அபாயகரமான வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேலதிக விசாரணைகள் யாழ் மாவட்ட பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Share This