ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 298 ரூபா 88 சதமாக பதிவாகியுள்ளது.
அத்துடன் விற்பனை விலை 306 ரூபா 37 சதமாக பதிவாகியுள்ளது.