கொழும்பில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு

தெமட்டகொடை, பேஸ்லைன் வீதியில் ரயில் பாதைக்கு அருகில் உள்ள கைவிடப்பட்ட வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை பம்பலப்பிட்டி குற்றப் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்துள்ளது.
குறித்த இடத்திலிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 9 மிமீ துப்பாக்கி, இரண்டு உயிருள்ள தோட்டாக்கள் மற்றும் ஒரு T-56 மகசின் ஆகியவற்றை பொலிஸார் மீட்டனர்.
பொரளை வனாத்தமுல்லையில் இயங்கும் இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையேயான மோதலுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கொலை செய்யும் நோக்கத்துடன் இந்த ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வனாத்தமுல்ல பகுதியில் இந்த இரண்டு கும்பல்களுக்கிடையேயான மோதல்களின் விளைவாக ஏற்கனவே பல கொலைகள் நடந்துள்ளன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.