பத்மேவுடன் கைதான பெண்ணும் குழந்தையும் நாட்டை வந்தடைந்தனர்

பத்மேவுடன் கைதான பெண்ணும் குழந்தையும் நாட்டை வந்தடைந்தனர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவுடன் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் குழந்தை இன்று (29) மதியம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து UL-365 விமானத்தில் இன்று மாலை சுமார் 5.50 அளவில் அவர்கள் இலங்கைக்கு வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கெஹல்பத்தர பத்மே தலைமையிலான குழு சமீபத்தில் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட நிலையில், அந்தப் பெண்ணும் குழந்தையும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இருப்பினும், அந்தப் பெண் மீது கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாததால், இந்தோனேசிய அதிகாரிகள் அவரை இலங்கைக்கு அனுப்பிவைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )