ரணிலை பார்வையிட சிறைச்சாலைக்கு சென்ற மஹிந்த

ரணிலை பார்வையிட சிறைச்சாலைக்கு சென்ற மஹிந்த

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சற்று முன்னர் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை (22) உத்தரவிட்டது.

விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க பின்னர் மருத்துவ ஆலோசனைக்கமைய சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

 

Share This