கோலி, ரோகித் தொடர்ந்தும் விளையாட வேண்டும் – கங்குலி

கோலி, ரோகித் தொடர்ந்தும் விளையாட வேண்டும் – கங்குலி

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாட வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

‘டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரே கடைசி சர்வதேச போட்டியாக இருக்கக்கூடும்’ என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து கங்குலியிடம் கேள்வியெழுப்பப்பட்டது. இதனையடுத்து பதல் அளித்து பேசிய அவர்,

“அது பற்றி எனக்கு தெரியாது. யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்கள் விளையாடுவார்கள். கோலியும், ரோகித்தும் நன்றாக ஆடி ஓட்டங்கள் பட்சத்தில், அவர்கள் தொடர்ந்து விளையாட வேண்டும்.

விராட் கோலியின் ஒரு நாள் போட்டி சாதனை தனித்துவமானது. ரோகித் சர்மாவும் வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் நிறைய சாதித்து இருக்கிறார்’ என்றார்.

தொடர்ந்தும் பேசிய அவர், இந்தியா மிகவும் பலம் வாய்ந்த அணி. சிவப்புநிற பந்து கிரிக்கெட்டில் வலுவாக இருக்கிறது என்றால், வெள்ளை நிற பந்து போட்டியில் அதை விட வலுவாக திகழ்கிறது.

எனவே ஆசிய கிண்ணத்தை வெல்வதற்கு இந்தியாவுக்கே வாய்ப்பு அதிகம் என்பது எனது கருத்து. அதுவும் துபாய் போன்ற ஆடுகளத்தில் இந்தியாவை வீழ்த்துவது கடினம்’ என கங்குலி மேலும் தெரிவித்துள்ளார்.

பெங்கால் கிரிக்கெட் சங்க நிர்வாகத்தில் மீண்டும் அடியெடுத்து வைப்பது குறித்து கேட்ட போது, ‘உறுப்பினர்கள் விரும்பினால் பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வேன்’ என்றார்.

Share This