திருகோணமலையில் காலை நேரத்தில் ஏற்பட்ட விபத்து – ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலையில் காலை நேரத்தில் ஏற்பட்ட விபத்து – ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பச்சநூர் சந்தியில் வைத்து கார்-ரிப்பர் வாகனங்கள் நேருக்குநேர் மோதியதில் காரில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

காயமடைந்தவர் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (08) காலை இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காரில் பயணித்த தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர் தோப்பூரைச் சேர்ந்த முஸ்தகீம் சியான் என தெரியவருகிறது.

ரிப்பர் சாரதிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது – காரில் பயணித்தவர்கள் தோப்பூரிலிந்து மன்னாருக்கு வேலை நிமிர்த்தமாக சென்று கொண்டிருந்தபோது எதிர் திசையில் வந்த ரிப்பர் வாகனத்துடன் நேருக்குநேர் மோதியதிலே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த நபரின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )