ரணிலின் பிரத்தியேக செயலாளர் சிஐடிக்கு அழைப்பு

ரணிலின் பிரத்தியேக செயலாளர் சிஐடிக்கு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிச் செயலாளர் சாண்ட்ரா பெரேரா குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜனாதிபதி செயலகத்தின் நிதி ஏற்பாடுகளைப் பயன்படுத்தி 2023 செப்டம்பர் 13 முதல் 24 வரை மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக வாக்குமூலம் பெற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிச் செயலாளர் சாண்ட்ரா பெரேரா குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பயணத்திற்காக 1.69 பில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதேபோல், முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் இது தொடர்பாக நாளை குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )