மஹியங்கனையில் நீரில் மூழ்கி ஒருவர் பலி

மஹியங்கனை நெலும் வாவியில் குளிக்கச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
அந்த நபர் பண்டாரவளை பகுதியிலிருந்து நேற்றைய தினம் மஹியங்கனைக்கு சுற்றுலா சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 58 வயது நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.