35 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சேர்ப்பு செயன்முறையில் மாற்றம் மேற்கொள்ளும் பெற்றோலிய கூட்டுத்தாபனம்

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் அதன் பணியாளர் ஆட்சேர்ப்பு செயன்முறையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனூடாக ஆட்சேர்ப்பு செயற்பாட்டில் இருந்த முறைகேடுகளை நீக்க முடியும் என
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன நிர்வாக பணிப்பாளர் மயூரா நெட்டிகுமார தெரிவித்தார்.
2012 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 3000 ஊழியர்கள் தேவையின் அடிப்படையில் சுமார் 2031 ஊழியர்களாகக் குறைக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.