ஜூலை மாதத்தின் முதல் 06 நாட்களில் 36,000 இற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் முதல் 06 நாட்களில் 36,002 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 இலட்சத்தை கடந்துள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அண்மைய புள்ளிவிபரங்களுக்கமைய, இதுவரை 1,204,046 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர்.
இதேவேளை, 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் நாட்டின் சுற்றுலா வருவாய் 1.71 பில்லியன் அமெரிக்க டொலர் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.