சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 08 இந்திய மீனவர்கள் கைது

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 08 இந்திய மீனவர்கள் கைது

தலைமன்னாரை அண்மித்த இலங்கை கடற்பகுதியில், சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 08 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, படகொன்றும் பறிமுதல் செய்யப்பட்டதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் தலைமன்னாருக்கு அழைத்து வரப்படுவதாகவும், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்திய கடற்றொழிலாளர்களுக்கு அண்மையில் விதிக்கப்பட்டிருந்த மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்ததன் பின்னர், இந்திய கடற்றொழிலாளர் கைதுசெய்யப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

Share This