இறக்குமதி செய்யப்பட்ட உப்பு தரமற்றவை – திருப்பியனுப்ப நடவடிக்கை

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட உப்பு அடங்கிய 05 கொள்கலன்களை திருப்பியனுப்ப பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சுங்கம் தெரிவித்துள்ளது.
அந்த கொள்கலன்களில் உள்ள உப்பு தொகை இலங்கையின் தர ஆய்வுகளில் நிராகரிக்கப்பட்டுள்ளதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து உப்பு கொள்கலன்களும் தரநிலை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்த
சுங்க ஊடகப்பேச்சாளர் சீவலி அருக்கொட 05 கொள்கலன்களில் உள்ள உப்பு தொகை தரமற்றவை என கண்டறியப்பட்டதாக தெரிவித்தார்.
உப்பு இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து சுமார் 2000 கொள்கலன்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
உப்பு இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்ட காலவகாசம் கடந்த 10ஆம் திகதியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.