மத்திய மலைநாட்டில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு

மத்திய மலைநாட்டில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு

மத்திய மலைநாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக அங்குள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகல்ல நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமானது வன்பாயும் அளவை எட்டியுள்ளதாக குறித்த நீர்த்தேக்கங்களுக்குப்
பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், டெவோன் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் அதனை அண்மித்த சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )