ஜூன் மாதத்தில் 40,000 ஐ கடந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

நாட்டிற்கு வருகைத் தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 43,962 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து மாத்திரம் 12,362 சுற்றுலாப் பயணிகள் வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூன் மாதத்தில் இங்கிலாந்திலிருந்து 3,740 பேரும், பங்களாதேஷிலிருந்து 2,717 பேரும் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதுடன்
ஜெர்மனியிலிருந்து 2,439 சுற்றுலாப் பயணிகளும் சீனாவிலிருந்து 2,403 பேரும் வருகைத் தந்துள்ளனர்.
இதற்கமைய 2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகைத் தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
1,073, 765 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில், 216,422 பேர் இந்தியாவிலிருந்தும், 111,285 பேர் ரஷ்யாவிலிருந்தும், 100,014 பேர் இங்கிலாந்திலிருந்தும் வருகைத்தந்துள்ளதாக
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.