ஏர் இந்திய நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமொன்று அவசரமாகத் தரையிறக்கம்

ஏர் இந்திய நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமொன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்திலிருந்து 156 பணிகளுடன் டெல்லி நோக்கிப் பயணித்த விமானமொன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து குறித்த விமானம் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பயணிகள் வெளியேற்றப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முதற்கட்ட தேடலுக்குப் பின்னர் ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கவில்லை என தாய்லாந்து விமான நிலைய அதிகாரிகளை மேற்கோள் காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.