CID யில் இருந்து ரணில் விக்ரமசிங்க வௌியேறினார்

ஒரு மணிநேர வாக்குமூலத்திற்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வௌியேறினார்.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் இன்று புதன்கிழமை (11) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.
நாட்டிற்குள் மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்ல அளித்திருந்த முறைப்பாட்டுக்கமைய, முந்தைய அரசாங்கத்தின் பல அமைச்சர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இது தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.