இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையே எரிசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்தல் குறித்து கலந்துரையாடல்

இலங்கைக்கான பிரான்ஸ் தூதர் ரெமி லம்பேர்ட் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு எரிசக்தி அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே எரிசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுத்தமான எரிசக்தி ஆதாரங்களை, குறிப்பாக சூரிய சக்தி மற்றும் காற்றாலை திட்டங்களை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள், நீர் மின் நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களின் திறனை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள், எரிசக்தி செயற்திறனை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப மற்றும் நிதி ஒத்துழைப்பு திட்டங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிசக்தியை மேம்படுத்த எடுக்கக்கூடிய புதிய கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.