பொசன் பண்டிகையை முன்னிட்டு பக்தர்களுக்கு விசேட பாதுகாப்பு

பொசன் பண்டிகையை முன்னிட்டு பக்தர்களுக்கு விசேட பாதுகாப்பு

பொசன் பண்டிகையை முன்னிட்டு அனுராதபுரத்திற்கு வரும் பக்தர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கும் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் முதன்மையாக மிஹிந்தலை மற்றும் அட்டமஸ்தானாவில் செயற்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்போது பாதுகாப்பு நோக்கங்களுக்காக 8,000 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மேலும் தெரிவித்தார்.

 

Share This