மின்சார சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

மின்சார சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல்  செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

நீதிபதிகளான ஏ.எச்.எம்.டி. நவாஸ், அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

இதன்படி, எதிர்வரும் 06 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கத்தால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This