நாடு முழுவதும் 70,000 இற்கும் மேற்பட்ட மின் தடைகள் பதிவு

இன்று (1) மாலை 05 மணி நிலவரப்படி,சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் மொத்தம் 70,012 மின் தடைகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை ( தெரிவித்துள்ளது.
இவற்றில் 41,684 மின் தடைகள் சீர்செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.
மீதமுள்ள மின் தடைகளை புனரமைக்க கூடுதல் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.