பலத்த மழை காரணமாக வான்கதவுகள் திறப்பு

பலத்த மழை காரணமாக வான்கதவுகள் திறப்பு

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மேல் கொத்மலை, விமலசுரேந்திர, காசல்ரீ ஆகிய நீரேந்தும் பகுதிகளில் அதிகமான நீர்மட்டம் காணப்பட்டது.

இந்நீரினை வெளியேற்றுவதற்காக நேற்று (31) முதல் நீரேந்தும் பகுதிகளில் வான்கதவுகள் திறக்கப்பட்டன

காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் அதிகரித்துள்ள நிலையில் நீர்தேக்க பகுதிகளில் தாழ்வான பிரதேசத்தில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

CATEGORIES
TAGS
Share This