போலந்துக் குடியரசின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் நாட்டை வந்தடைந்தார்

போலந்துக் குடியரசின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரெடொஸ்லாவ் சிகோர்ஸ்கி, மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் இன்று புதன்கிழமை காலை (28.05.2025) நாட்டை வந்தடைந்தார்.
இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திர அவரை வரவேற்றார்.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சிகோர்ஸ்கி இன்று பிற்பகல் சந்திக்கவுள்ளார்.
மேலும் மரியாதை நிமித்தம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி
ஹரிணி அமரசூரிய ஆகியோரை சிகோர்ஸ்கி சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
போலந்து வெளியுறவு அமைச்சருடன் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் போலந்து குடியரசின் வெளியுறவு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளும் வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.