23 ரயில்கள் இரத்து

பிரதான மார்க்கத்தில் 23 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
ரயில்வே சாரதிகளின் பற்றாக்குறை காரணமாக ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பிரதான, களனி, கரையோர மற்றும் புத்தளம் மார்க்கத்திலான ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் நாளைய தினம் ரயில்வே போக்குவரத்து வழமைக்கு திரும்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே
திணைக்களம் தெரிவித்துள்ளது.