இன்றும் நாளையும் சிறைக் கைதிகளை சந்திக்க வாய்ப்பு

இன்றும் நாளையும் சிறைக் கைதிகளை சந்திக்க வாய்ப்பு

வெசாக் போயா தினத்தை முன்னிட்டு சிறைச்சாலை கைதிகளுக்கு பார்வையாளர்களை சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்றும் நாளையும் இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைதிகளின் உறவினர்களால் கொண்டு வரப்படும் உணவுப் பொதிகள், இனிப்புகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஆகியவற்றை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவிக்கிறது.

இந்த பார்வையாளர்கள் சந்திப்பு நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கமைய இடம்பெறவுள்ளன.

 

Share This