உர மோசடி – விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருக்கு விளக்கமறியல்

உர  மோசடி – விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருக்கு விளக்கமறியல்

ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட விவசாய இராஜாங்க அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் மகேஷ் கம்மன்பிலவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் சீனாவின் Qingdao Seawin Biotech நிறுவனத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரத்தொகை தொடர்பில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற கரிம உரக் கையிருப்பு தொடர்பாக இடைநிறுத்தப்பட்ட கடன் கடிதங்களைத் திறக்க ஆலோசனை வழங்கியதன் மூலம் முதல் உரக் கையிருப்பில் 75%, அதாவது சுமார் 6.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டதால் அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து மே மாதம் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

 

 

Share This