உள்ளூராட்சித் தேர்தல் – கடந்த 24 மணித்தியாலங்களில் 30 முறைப்பாடுகள்

உள்ளூராட்சித் தேர்தல் – கடந்த 24 மணித்தியாலங்களில் 30 முறைப்பாடுகள்

கடந்த 24 மணித்தியாலங்களில் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் 30 முறைப்பாடுகள் இலங்கை பொலிஸ் இற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

இவற்றில் 09 முறைப்பாடுகள் தேர்தல் வன்முறையுடன் தொடர்புடையவை என்றும் 21 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்களுடன் தொடர்புடையவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் வேட்பாளர் ஒருவரும் ஆதரவாளர்கள் எழுவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 28 ஆம்திகதி வரை இலங்கை பொலிஸ் இற்கு தேர்தல் தொடர்பான 398 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்தக் காலப்பகுதியில் 30 வேட்பாளர்களும் 131 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 31 வாகனங்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

Share This