
கண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை பாடசாலைகள் ஆரம்பம்
ஸ்ரீ தலதா வழிபாடு காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த கண்டி நகரிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 24 பாடசாலைகள் நாளை திங்கட்கிழமை (28) முதல் வழமைபோன்று மீண்டும் ஆரம்பமாகும் என மத்திய மாகாண பிரதம செயலாளர் அறிவித்துள்ளார்.
அத்துடன் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு வசதிகளை வழங்கும் மேலும் 37 பாடசாலைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் (29) மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் செயலாளர் தெரிவித்தார்.
CATEGORIES இலங்கை
