மீன்களை ஏற்றிச் செல்லும் லொரிகளில் கடத்தப்பட்ட போதைப்பொருள்

மீன்களை ஏற்றிச் செல்லும் லொரிகளில் கடத்தப்பட்ட போதைப்பொருள்

சுமார் 8 மில்லியன் ரூபா மதிப்புள்ள போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண தெற்கு பிரிவு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபரிடம் இருந்து 02 கிலோகிராம் 40 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

மன்னாரில் இருந்து பேலியகொடை மீன் சந்தைக்கு மீன்களை ஏற்றிச் செல்லும் லொரிகளின் மீன் பெட்டிகளில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக
கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் தொடர்புடைய முக்கிய நபர் மீன் சந்தை ஊழியர் என்பதும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This