ஏப்ரல் மாதத்தின் முதல் இரு வாரங்களில், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை அண்மித்தது

ஏப்ரல் மாதத்தின் முதல் இரு வாரங்களில், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை அண்மித்தது

ஏப்ரல் மாதத்தின் முதல் பதினைந்து நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 90,000 ஐ கடந்துள்ளது.

இதன்படி, இதுவரை 93,915 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பிரித்தானியா, ரஷ்யா, ஜேர்மன், அவுஸ்திரேலியா, பிரான்ஸ், சீனா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்தும் அதிகளவான
சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 800,000 ஐ கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share This