தோட்டாக்கள் மீட்பு

T 56 துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 50 தோட்டாக்களையும் கூர்மையான ஆயுதமொன்றையும் அத்துருகிரிய பொலிஸார் மீட்டுள்ளனர்.
பொலிஸ் தடுப்புக் காவலில் உள்ள சந்தேக நபர் ஒருவர் தெரிவித்த தகவலைத் தொடர்ந்து இந்த மீட்பு பணி நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் கடந்த 12 ஆம் திகதி அத்துருகிரிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவால் 11 கிராம் 100 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
பின்னர் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
மேலும் விசாரணையின் போது தெரியவந்த தகவல்களுக்கமைய ஆயுதமும் தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.