எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற குழுக்களில் அதிக பிரதிநிதித்துவம் வழங்குமாறு கோரிக்கை

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற குழுக்களில் அதிக பிரதிநிதித்துவம் வழங்குமாறு கோரிக்கை

எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கு, குழுக்களில் அதிக பிரதிநிதித்துவம் வழங்குமாறு எதிர்க்கட்சி அரசியல் காட்சிகள் விடுத்த கோரிக்கையை கருத்திற்கொள்ள விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று (22) இடம்பெற்றதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவும் கலந்துகொண்டார்.

இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் சபாநாயகரினால் 19 ஆம் திகதி சபையில் அறிவித்த தீர்மானம் தொடர்பில் நன்றி தெரிவித்து இந்த விடயம் சம்பந்தமான ஆளும்கட்சியின் நிலைப்பாட்டை சபை முதல்வர் சபாநாயகருக்கு எழுத்துமூலம் அறிவித்திருந்ததுடன், அந்தக் கடிதம் இதன்போது வாசிக்கப்பட்டது.

அதனையடுத்து, குழுக்களில் எதிர்க்கட்சியின் அங்கத்துவத்தை அதிகரிக்குமாறு எதிர்க்கட்சி முதற்கோலாசான் விடுத்த கோரிக்கை தொடர்பில் சாதகமாகக் கருத்திற்கொண்டு ஆளும்கட்சியின் தீர்மானத்தை விரைவாக வழங்குவதாக சபை முதல்வர் இந்தக் கூட்டத்தில் மேலும் தெரிவித்தார்.

Share This