வெப்பநிலை குறித்து எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை நிலை வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை நிலை வரை அதிகரிக்கும் என வளிமண்டலவியல்
திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.