
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு
ஆமோரி மற்றும் ஹொக்கைடோ மாகாணங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பானின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 4:53 மணிக்கு ஏற்பட்டது என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் வடகிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளில் மூன்று மீட்டர் வரை உயரமான பேரலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
