பாணந்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – பொது மக்களின் உதவி கோரும் பொலிஸார்

பாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த மாதம் 29 ஆம் திகதி பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது.
பாணந்துறை, அலுபோமுல்ல, ஹொரண பகுதியைச் சேர்ந்த ராஜீவ் சூரஜ் சாமர என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், இந்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வருகிறார்.
சந்தேக நபரின் படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். மேலும் அவர் இருக்கும் இடத்தைக் கண்டறிய பொதுமக்களிடமிருந்து தகவல்களைக் கோருகின்றனர்.
இவர் தொடர்பில் தகவல் அறிந்தால்,
075 8900009 – பாணதுறை குற்ற விசாரணை பிரிவு
071 7409070 – பொலிஸ் பரிசோதகர் மதுஷான்
038-2241467 பாணதுறை குற்றத் தடுப்பு பிரிவு அலுவலகம், போன்ற இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.