இ​மாச்சல பிரதேசத்​தில் தொடரும் பரு​வ​மழை – 320 பேர் உயிரிழப்பு

இ​மாச்சல பிரதேசத்​தில் தொடரும் பரு​வ​மழை – 320 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் இ​மாச்சல பிரதேசத்​தில் தொடரும் பரு​வ​மழை காரணமாக அம்​மாநிலத்​தின் உட்​கட்​டமைப்பு கடுமை​யாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேகவெடிப்பு மற்​றும் பலத்த மழை​ காரணமாக இமாச்சல பிரதேசம் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

சீரற்ற வானிலையால் மூன்று தேசிய நெடுஞ்​சாலைகள், 1,236 மின் மாற்​றிகள், 424 நீர் வழங்​கல் திட்​டங்​கள் மற்றும் 819 வீதிகள் சேதமடைந்​துள்​ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணை​யம் தெரி​வித்​துள்​ள​தாவது.

கடந்த ஜூன் மாதம் 20 ஆம் திகதி முதல், மாநிலத்​தில் ஏற்​பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 302 ஆக அதிகரித்துள்ளது.

இவற்​றில் மண்சரிவு, திடீர் வெள்​ளம், மின்​சா​ரம் போன்​றவை தொடர்​பான சம்​பவங்​களால் மாத்திரம் 166 பேர் உயி​ரிழந்​துள்​ளனர்.

மேலும் வீதி விபத்​துகளினால்154 பேர் உயிரிழந்துள்​ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Share This