சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராமின் நினைவேந்தல் நிகழ்வு

சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராமின் நினைவேந்தல் நிகழ்வு

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராமின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (29) மாலை 4.30. மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவு தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது.

சிரேஷ்ட ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராமனின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, ஈகைச் சுடர் ஏற்றி, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மட்டு ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்டம் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர் பா.அரியநேந்திரன், சுதந்திர ஊடக இயக்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் லக்ஸ்மன் உட்பட மாவட்ட ஊடகவியலாளர்கள் சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன் தராக்கி சிவராமின் சமூக நலன், தமிழ்பற்று, தமிழினத்தின் கெடுபிடிகள், பேனா முனையின் சாதனைகள் என இங்கு அதிதிகளினால் உணர்வு ரீதியாக உரையாற்றப்பட்டன.

Share This