
சஜித் பிரேமதாச மற்றும் நோர்வே தூதுவர் இடையே சந்திப்பு
நோர்வே தூதுவர் எச்.இ. மே-எலின் ஸ்டெனர் (H.E. May-Elin Stener) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரிடையே
சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது, தற்போதைய இலங்கையின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் விரிவாக கலந்துரையாடினர்.
தற்போதைய வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்கத் தேவையான உதவிகளை வழங்குமாறும், அதற்கு எதிர்க்கட்சி என்ற முறையில் முழு ஆதரவை வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நோர்வே தூதுவரிடம் தெரிவித்தார்.
CATEGORIES இலங்கை
