
புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
பாரம்பரிய புத்தாண்டு விளையாட்டுகளைத் தவிந்த வேறு செயல்பாடுகளை உள்ளடக்கிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதுபோன்ற சீரழிந்த செயல்களுடன் நடத்தப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறித்த தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாக புத்தசாசன பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட தகவல்களை முறையாகச் சேகரித்த பிறகு, நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலங்களில், சீரழிந்த செயல்கள் உள்ளிட்ட புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், இது இந்த நாட்டின் கலாச்சாரத்தை அழித்து வருவதாகவும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சீரழிந்த நடவடிக்கைகள் தொடர்பாக அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் விமல் வீரவன்ச கடுமையாக விமர்சனங்களை முன்வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
