சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 1.9 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகைத்தந்துள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதத்தில் மாத்திரம் இதுவரை 90,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்துள்ளார்.

இந்த மாத இறுதிக்குள் மேலும் 250,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் 2.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலக்காகக் கொண்டு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இலக்கு வைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This