Category: முக்கிய செய்திகள்

இலங்கை விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது

Mano Shangar- May 9, 2025

ஹிங்குராக்கொட விமானப்படை தளத்தில் பயிற்சி அமர்வின் போது புறப்பட்ட பெல் 212 ரக ஹெலிகாப்டர் மதுரு ஓயாவில் விபத்துக்குள்ளானதாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேறியதாக விமானப்படை ... Read More

புதிய போப்பாக அமெரிக்க கார்டினல் ரொபர்ட் பிரீவோஸ்ட் தெரிவு

Mano Shangar- May 9, 2025

கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக அமெரிக்க கார்டினல் ரொபர்ட் பிரீவோஸ்ட் நேற்று வியாழக்கிழமை தெரிவுசெய்யப்பட்டுள்ளார். லியோ XIV என்ற பெயரைப் பெற்று, முதல் அமெரிக்க போப்பாண்டவராக ஆனார். சிஸ்டைன் தேவாலயத்தின் மேல் உள்ள புகைபோக்கியில் ... Read More

வடக்கில் மேலும் காணிகளை கையகப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் ‘மீளப்பெற’ வேண்டும்

Nishanthan Subramaniyam- May 8, 2025

வட மாகாணத்தில் சுமார் ஆறாயிரம் ஏக்கர் கரையோர காணிகளை மூன்று மாத காலத்திற்குள் விரைவாகக் கையகப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முயற்சிக்கு நான்கு மாவட்ட மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். மார்ச் 28, ... Read More

இந்திய, பாகிஸ்தான் போரில் தலையிடும் ட்ரம்ப்

Nishanthan Subramaniyam- May 8, 2025

பழிக்குப்பழி தாக்குதல்கள் நடத்தப்பட்டுவிட்டதால் இந்தியாவும் பாகிஸ்தானும் இனி நிறுத்திக்கொள்வார்கள் என தான் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், “நான் இரு தரப்புடனும் நன்றாகப் ... Read More

கொட்டாஞ்சேனை மாணவி உயிரிழந்த சம்பவம் – ஆசிரியருக்கு இடமாற்றம் – பணி நீக்கத்துக்கும் உத்தரவு?

Mano Shangar- May 8, 2025

கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் பாடசாலையில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு இது குறித்து அறிக்கையொன்றை ... Read More

கொழும்பை ஆளப்போவது யார்?

Nishanthan Subramaniyam- May 8, 2025

பல தசாப்தங்களாக தனது ஆட்சி அதிகாரத்தின்கீழ் இருந்த மிக முக்கிய உள்ளுராட்சி மன்றங்களில் ஒன்றான கொழும்பு மாநகர சபையை இம்முறை ஐக்கிய தேசியக் கட்சி இழந்துள்ளது. குறித்த சபைக்கு கூடுதல் வாக்குகளைப் பெற்றிருந்தாலும் ஆட்சி ... Read More

எல்லைகள் மூடப்பட்டன, ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு தயார் – இந்திய-பாக் எல்லை பகுதியில் கடும் பதற்றம்

Mano Shangar- May 8, 2025

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய பதிலடியைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரைத் தவிர, பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இரு மாநிலங்களிலும் விடுப்பில் ... Read More

இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்; லாகூருக்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நிறுத்தம்

Mano Shangar- May 8, 2025

பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையிலிருந்து பாகிஸ்தானின் லாகூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இன்று (08) ... Read More

கொழும்பில் மாணவி அம்ஷிக்கு நீதிகோரி பெரும் போராட்டம் – இரமநாதன் இந்து கல்லூரி வளாகத்தில் பதற்றம்

Mano Shangar- May 8, 2025

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பில் உள்ள டூப்ளிகேஷன் வீதி முற்றிலுமாக தடைப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் கொட்டாஞ்சேனை பகுதியில் கட்டிடத்தில் இருந்து விழுந்து மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த மாணவி கல்வி பயின்ற ... Read More

‘நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் மாடல் ஆட்சியின் செயலற்ற 4 ஆண்டுகள்’ – இபிஎஸ் விமர்சனம்

Nishanthan Subramaniyam- May 8, 2025

“4 ஆண்டு கால திமுக ஆட்சியை `ஸ்டாலின் மாடல் ஆட்சி’ என்று ஆளுங்கட்சியினர் புகழ்ந்தாலும், பொதுமக்கள் நிர்வாகத் திறமையற்ற ஆட்சி என்றுதான் விமர்சிக்கின்றனர். இந்த ஆட்சியின் நான்கு ஆண்டுகளையும் செயலற்ற ஆண்டுகளாகவே அதிமுக உணர்கிறது.” ... Read More

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து – 12 பேர் படுகாயம்

Mano Shangar- May 8, 2025

மாத்தறை-அக்குரஸ்ஸ பிரதான வீதியில் இன்று (08) காலை பயணித்த வான் ஒன்று, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பலட்டுவ நுழைவாயிலுக்கு அருகில் சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் லொரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ... Read More

கொழும்பில் மாணவியை அச்சுறுத்திய சந்தேகநபர் கைது

Mano Shangar- May 8, 2025

அனுமதியின்றி காரில் நுழைந்து எட்டு வயது சிறுமியையும் அவரது தாயாரையும் அச்சுறுத்திய சந்தேக நபர் ஒருவர் நேற்று (7) கறுவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் கடந்த இரண்டாம் திகதி கொழும்பு ... Read More