Category: முக்கிய செய்திகள்

டிட்வா புயல் முழுமையாக இலங்கையை விட்டு நீங்கியது

Mano Shangar- November 30, 2025

இன்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் சில பகுதிகளுக்கு மிதமானது முதல் சற்று கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் அவ்வப்போது காற்று சற்று வேகமாக வீசும். புயல் ... Read More

மாவனெல்ல கோவில் கந்த பகுதியில் மண்சரிவு – நால்வரை காணவில்லை

Mano Shangar- November 30, 2025

கேகாலை மாவட்டத்தில் உள்ள மாவனெல்லாவின் கோவில் கந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக மாவனெல்ல மேலதிக மாவட்ட செயலாளர் திலிப் நிஷாந்த தெரிவித்தார். மேலும் இரண்டு பேரை ... Read More

கொழும்பின் பல பகுதிகள் தற்போதும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது

Mano Shangar- November 30, 2025

தித்வா சூறாவளியால் ஏற்பட்ட கனமழை காரணமாக, களனி ஆற்றின் நீர்மட்டம் எதிர்பாராத விதமாக உயர்ந்துள்ளது. மேலும் ஹன்வெல்ல நகரின் பிரதான பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகங்களைச் சுற்றியுள்ள பல கிராமங்கள் ஏற்கனவே வெள்ளத்தில் ... Read More

சீரற்ற வானிலை – இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் ஜனாதிபதி அவசர சந்திப்பு

Mano Shangar- November 30, 2025

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும், இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கும் வேலைத்திட்டத்திலும் இந்நாட்டு வர்த்தக சமூகத்தின் ஆதரவை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் நேற்று (29) இரவு ... Read More

கட்டுநாயக்க விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு

Mano Shangar- November 30, 2025

நிலவும் பாதகமான வானிலை காரணமாக பல விமான நிலையத்திற்கு வரும் பாதைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) ஊடாக பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் ... Read More

களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது – அவசரமாக வெளியே மக்களுக்கு அறிவுறுத்தல்

Mano Shangar- November 30, 2025

களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன கினிகே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, கடுவெல - மாலபே, ... Read More

பொது அவசரகால நிலை பிரகடனம் – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

admin- November 29, 2025

இலங்கையில் பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. அதிவிசேட வர்த்தமானி எண். 2464/30 ... Read More

கலா ஓயா பாலத்தில் வெள்ளத்தில் சிக்கிய பஸ் – 67 பயணிகளும் பாதுகாப்பாக மீட்பு

admin- November 29, 2025

அநுராதபுரம்-புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தில் வெள்ளத்தில் சிக்கிய பஸ்ஸொன்றில் இருந்த 67 பயணிகளும் மீட்கப்பட்டதாக பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. முதலில் சுமார் 40 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் ... Read More

சீரற்ற வானிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 123 ஆக அதிகரிப்பு

admin- November 29, 2025

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 12 மாவட்டங்களில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளது. கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 51 இற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ... Read More

கலா ஓயா பாலத்தில் வெள்ளத்தில் சிக்குண்ட பஸ் – சுமார் 40 பயணிகள் பாதுகாப்பாக மீட்பு

admin- November 29, 2025

அனுராதபுரம்-புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தில் வெள்ளத்தில் சிக்கிய பஸ்ஸில் இருந்த சுமார் 40 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. பஸ்ஸின் மேற்பகுதியில் வெளிநாட்டு பெண் ஒருவர் உட்பட சுமார் ... Read More

இந்திய மீட்புப் பணிக் குழுவினரும் நாட்டிற்கு வருகை

admin- November 29, 2025

இந்திய மீட்புப் பணிக் குழுவினர் இன்று (29) அதிகாலை இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்திய விமானம் மூலம் இந்தக் குழுவினர் நாட்டை வந்தடைந்துள்ளனர். இந்த குழுவில் நான்கு பெண்களும் 76 ஆண்களும் அடங்குவதுடன் நான்கு ... Read More

மறு அறிவித்தல் வரை உயர் தரப் பரீட்சை ஒத்திவைப்பு

admin- November 28, 2025

மறு அறிவித்தல் வரை க.பொ.த உயர் தரப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக, உயர்தரப் பரீட்சை உட்பட அனைத்துப் பரீட்சைகளையும் காலவரையின்றி ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக   பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி ... Read More