Category: முக்கிய செய்திகள்
மின் கட்டணத்தை 18.3 வீதம் அதிகரிக்க வேண்டும் – இலங்கை மின்சார சபை
செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின்கட்டணத்தை 18.3 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஜூன் முதல் வாரத்தில் இந்த விடயம் தொடர்பான இறுதித் ... Read More
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நியாயமற்ற முறையில் பணிப்பகிஷ்கரிப்பு – அரசாங்கம் அதிருப்தி
தீர்வு வழங்கப்பட்டுள்ள போதிலும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நியாயமற்ற முறையில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அதிருப்தி வெளியிட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நேற்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ... Read More
உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களை நியமித்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று
உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் அழைப்பை ஏற்று, இன்று (17) நடைபெறவுள்ள கலந்துரையாடலில் தாம் பங்கேற்பதாக, ஸ்ரீ லங்கா ... Read More
சுகாதார அமைச்சுக்கு முன்பாக போராட்டம் – 09 பேர் கைது
சுகாதார அமைச்சுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் (IUSF) அழைப்பாளர் உட்பட ஒன்பது (09) பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக இன்றைய தினம் கொழும்பில் உள்ள வைத்தியசாலை சதுக்கத்திலும் சுகாதார ... Read More
கிராமிய அபிவிருத்திக்கு செயற்றிறன் மிக்க வகையில் பங்களிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்
நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை உயிர்பிக்கச் செய்வதன் மூலம் கிராமிய அபிவிருத்திக்கு செயற்றிறன்மிக்க வகையில் பங்களிப்பு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களையும் அறிவுறுத்தினார். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்கள் ... Read More
பயணிகளுக்கு ஆபத்தானதான 11 நீண்ட தூர சேவை பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை
நீண்ட தூர சேவைகளுக்காக நிறுத்தப்பட்டுள்ள அரசாங்க மற்றும் தனியார் பேருந்துகளை ஆய்வு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஹட்டனில் இருந்து நீண்ட தூர சேவைகளுக்காக நிறுத்தப்பட்ட பேருந்துகள் இன்று (15) கினிகத்தேன பொலிஸாரால் அவசர ... Read More
இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் – பாகிஸ்தான் அறிவிப்பு
இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மே 10 அன்று இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்ட ... Read More
மோசமான வானிலை – உப்பு உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி
மழையுடன் கூடிய தொடர்ச்சியான மோசமான வானிலை காரணமாக, இந்த ஆண்டு ஒரு கனசதுர உப்பைக் கூட உற்பத்தி செய்ய முடியவில்லை என்று லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் டி. நந்தனதிலக தெரிவித்தார். இந்த பாதகமான ... Read More
210 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த இருவர் விமான நிலையத்தில் கைது
கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) ஊடக 210 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த இரண்டு பயணிகளை குற்றப் புலனாய்வுத் துறை (CID) கைது செய்துள்ளது. சந்தேக நபர்கள் ... Read More
அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி 100 மில்லியன் ரூபா இழப்பீடு கோரும் பிள்ளையான்
பிள்ளையான் என்று பரவலாக அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், இலங்கை உச்ச நீதிமன்றத்தில் ஒரு அடிப்படை உரிமைகள் (FR) மனுவைத் தாக்கல் செய்துள்ளார். குற்றப் புலனாய்வுத் துறையால் (CID)தான் சமீபத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதன் ... Read More
இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த ஆறு பேர் கைது
இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த நான்கு இலங்கையர்கள் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களை சேர்ந்த ஆண், பெண் ... Read More
இலங்கை வரலாற்றில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி
இலங்கையின் பதினோறாவது பரீட்சைகள் ஆணையாளராக ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே நேற்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாகப் பொறுப்பேற்றார். நாட்டின் முதல் பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே நேற்று(15) பரீட்சைகள் ... Read More












