Category: இலங்கை
வவுனியா மற்றும் கிரிபத்கொடையில் ஆயுதங்கள் மீட்பு – விசாரணையில் வெளியான தகவல்
வவுனியா மற்றும் கிரிபத்கொ உள்ளிட்ட பகுதிகளில் அண்மையில் மீட்கப்பட்ட ஆயுதங்களுடன் "பிரவீன்" என்ற ஒரு நபருக்கு தொடர்பு இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தினர். ... Read More
வனப் பகுதிகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்
இலங்கையின் வனப் பகுதிகள் அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பு குறித்தும் தகவல்களை வழங்க புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய தொலைபேசி இலக்கம் நாளை திங்கட்கிழமை(03) முதல் அமுலாகும் வகையில் ... Read More
சீதை அம்மன் கோவிலில் கொள்ளை சம்பவம் – ஆறு உண்டியல்கள் உடைப்பு
நுவரெலியா, ஹக்கலவில் உள்ள சீதை அம்மன் கோவிலில் உள்ள ஆறு உண்டியல்கள் உடைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. விசேடமான முறையில் தயாரிக்கப்பட்ட மூன்று பணப் பெட்டிகள் ... Read More
பருத்தித்துறையில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
பருத்தித்துறையில் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை – புலோலி மேற்கு பகுதியில் வீடொன்றை, நேற்றையதினம் சோதனைக்குட்படுத்தியபோது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, 104 கிலோ 660 கிராம் கேரள கஞ்சா ... Read More
பொலிஸார் அதிரடி சோதனை!! மண்டியிட்டு அழுத சந்தேகநபர்
தனமல்வில மற்றும் அதை அண்மித்த பகுதிகளில் ஐஸ் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 32 வயதுடைய சந்தேகநபரை நபரை இம்மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வெல்லவாய நீதவான் நீதிமன்றம் ... Read More
கொழும்பிலிருந்து மும்பைக்கு கடத்தப்பட்ட போதைப்பொருள் – பல கோடி ரூபா பெறுமதி
இந்தியாவின் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் 47 கோடி இந்திய ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து மும்பைக்கு சென்ற விமானத்தில் போதைப் பொருள் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் ... Read More
இலங்கை – இந்திய மின் இணைப்புத் திட்டம் இறுதிக்கட்டத்தில்
இந்தியா மற்றும் இலங்கையின் தேசிய மின்சார கட்டமைப்புக்களை இணைக்கும் திட்டம், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்து வந்த பேச்சுவார்த்தைகள் மற்றும் ஆய்வுகளுக்குப் பிறகு, இப்போது நடைமுறைக்கு வரும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த திட்டம் முழுமையாக ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு – ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் விசேட சுற்றிவளைப்பில் மூன்று நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் மாத்திரம் 1,314 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளின் போது 1 கிலோ 202 கிராம் ஐஸ், 863 ... Read More
துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டாரா கெஹல்பத்தர பத்மே? விசாரணைகள் ஆரம்பம்
பாதள உலகக் குழு தலைவராக கருதப்படும் கெஹல்பத்தர பத்மே ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாக மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரபல ... Read More
ரப்பர் தொழிற்சாலையில் வெடிப்பு சம்பவம் – இளைஞர் ஒருவர் உயிரிழப்பு
யட்டியந்தோட்டை - கிரிபோருவ தோட்ட ரப்பர் தொழிற்சாலையில் இன்று (02) காலை 8:00 மணியளவில் நடந்த ஒரு துயர விபத்தில் 25 வயது இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரப்பர் லேடெக்ஸுடன் ரசாயனங்களை ... Read More
மஹாபொல புலமைப்பரிசில் நிதி முறைகேடு – நளின் பெர்னாண்டோவிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரம்
மஹாபொல புலமைப்பரிசில் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை பெற்று தற்போது சிறையில் உள்ள முன்னாள் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவின் காலத்தில் நிதி ... Read More
பிரதான மார்க்கத்திலான ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு
ரயில் ஒன்று தடம் புரண்டதால் பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளது. மீரிகம மற்றும் வில்வத்த ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (02) எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயில் ஒன்றே தடம் புரண்டுள்ளதாக ரயில்வே ... Read More












