தெமட்டகொட மேம்பாலத்தின் கீழ் மீட்கப்பட்ட சிசு
கொழும்பு – தெமட்டகொட மேம்பாலத்தின் கீழ் புதிதாகப் பிறந்த சிசுவொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
நேற்று (21) காலை தெமட்டகொட பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிசு மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிசு மீட்கப்பட்ட நேரத்தில், ஒரு துண்டு துணியில் சுற்றப்பட்டிருந்ததாகவும், உடனடியாக கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிசு சேர்க்கப்பட்டது.
எனினும், சிசு ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறவித்துள்ளனர். சிசு கண்டெடுக்கப்பட்ட இடத்தில் சில பெண்களின் ஆடைகளும் காணப்பட்டதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர்.