Author: Nishanthan Subramaniyam
ஜனாதிபதிக்கும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் ஏ. அல்-மர்ஷதிற்கும் (Sultan A. Al-Marshad) இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் (14) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. சவுதி ... Read More
புலிகளின் குரல் வானொலியின் அறிவிப்பாளர் மரணம்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் 'புலிகளின் குரல்' வானொலியின் பிரபல அறிவிப்பாளராகச் செயற்பட்ட சத்தியா (சிவசுப்பிரமணியம் ஞானகரன்) மாரடைப்பால் காலமானார். 1990 ஆம் ஆண்டில் புலிகளின் வானொலி தொடங்கி முதலாவது செய்தி ஒலிபரப்பாகியபோது “புலிகளின்குரல் ... Read More
புதிய வரலாற்று படைத்த கொழும்பு பங்குச் சந்தை
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) வரலாற்றில் முதன்முறையாக 19,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. நேற்றைய (14) வர்த்தக நாள் முடிவில், 18,838.39 புள்ளிகளாகப் பதிவாகியிருந்த அனைத்து பங்கு ... Read More
சவுதியுடன் இலங்கை மேற்கொண்ட கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம்
சவுதி மேம்பாட்டு நிதியத்துடன் (SFD) இருதரப்பு திருத்தக் கடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தானதன் மூலம், இலங்கை அதன் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. SFDஆல் முன்னர் நீட்டிக்கப்பட்ட கடன்களை மறுசீரமைக்க ... Read More
“பொல் தெஸதிய” விசேட திட்டம்
தெங்கு செய்கையை சேதப்படுத்தும் வெள்ளை ஈ, கருப்பு வண்டு, சிவப்பு வண்டு மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும், தெங்கு செய்கை தொடர்பான தொழில்நுட்ப அறிவை விவசாயிகளுக்கு வழங்கவும் “பொல் தெஸதிய” என்ற விசேட திட்டத்தை நாடு ... Read More
அதிகாரத்துக்காக எதையும் செய்யும் நிலையில் என்.பி.பி.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிள்ளையான் முன்கூட்டியே அறிந்திருந்தார் என கூறும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், கிழக்கில் ஆட்சியமைப்பதற்கு அவரின் உதவியையும் பெற்றுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா ... Read More
ரஷ்யா மீது 100% வரி விதிப்பு? – டிரம்ப் அதிரடி அறிவிப்பு
உக்ரைனில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறி, ரஷ்யாவுக்கு எதிராக 100% "இரண்டாம் நிலை வரிகள்" (secondary tariffs) விதிக்கப்படும் ... Read More
யாழ். குடாநாட்டில் தீவு பகுதிகளுக்கு சுற்றுலாச் செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை
யாழ். குடாநாட்டில் தீவு பகுதிகளுக்கு சுற்றுலாச் செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். அத்துடன், கடல்போக்குவரத்து சேவை வழங்கும் ... Read More
அணுசக்திப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க ஈரான் பரிசீலனை?
தங்களுடன் மீண்டும் அணுசக்திப் பேச்சுவார்த்தையைத் தொடங்க அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். அணுசக்திப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க ஈரானுக்கு அவசர தேவை கிடையாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ... Read More
தேர்தல் வாக்குறுதிகளை அரசாங்கம் மீறியுள்ளது
தேர்தல் காலப்பிரிவில் நாட்டு மக்களுக்கு வழங்கிய பல வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் மீறியுள்ளது என்பது விசேட கணக்கெடுப்பின் ஊடாக தெரியவந்துள்ளது. நாட்டில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்துவோம் என இந்த அரசாங்கம் தெளிவான வாக்குறுதியை வழங்கியிருந்தது. ... Read More
309 சிவப்பு லேபிள் கொள்கலன்கள் விடுவிப்பு
1805 ஆம் ஆண்டு இலங்கை சுங்கம் தொடங்கப்பட்டதிலிருந்து, சிவப்பு லேபிள்கள் கொண்ட எந்த கொள்கலன்களும் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்படவில்லை, ஆனால் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, 309 சிவப்பு லேபிள் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா ... Read More
போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக தமிழர் தரப்பை குற்றவாளியாக காண்பிக்கும் முயற்சி இடம்பெறுகின்றது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். ... Read More












