யோஷித ராஜபக்சவிடம் மேலும் இரண்டு துப்பாக்கிகள்

யோஷித ராஜபக்சவிடம் மேலும் இரண்டு துப்பாக்கிகள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவிடம் இருந்த ஏழு துப்பாக்கிகளில் ஐந்து தற்போது பொதுப் பாதுகாப்பு அமைச்சால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யா கோந்தா தெரிவித்தார்.

நேற்று(29) பொதுப் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“தனிநபர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிகளில் இருந்து 182 துப்பாக்கிகள் மட்டுமே பெறப்பட உள்ளன.

யோஷித ராஜபக்சவிடம் மேலும் இரண்டு துப்பாக்கிகள் காணப்படுவதாகவும் , மற்றுமொரு துப்பாக்கியும் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை” என்றும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This