ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்தது ஏன்? கொல்கத்தா அணியின் முன்னாள் பயிற்சியாளர் விளக்கம்

ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்தது ஏன்? கொல்கத்தா அணியின் முன்னாள் பயிற்சியாளர் விளக்கம்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் முன்னாள் தலைவரான ஸ்ரேயாஸ் ஐயர் அணியின் இருந்து விடுவிக்கப்பட்டதற்கான காரணத்தை அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் வெளிப்படுத்தியுள்ளார்.

ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு சிறந்த வீரர், ஆனால் சில விடயங்கள் சரியாக அமையவில்லை, அதனால்தான் அவர் அணியை விட்டு வெளியேற வேண்டியிருந்தது என்று பண்டிட் தெரிவித்துள்ளார்.

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையின் கீழ், கொல்கத்தா அணி 2024ம் ஆண்டு ஐபிஎல் கிண்ணத்தை மூன்றாவது முறையாக கைப்பற்றியது. எனினும், அடுத்த பருவத்தில் அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இதனைடுத்த 2025ம் ஆண்டு இடம்பெற்ற மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஸ்ரேயாஸ் ஐயர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
தற்போது அந்த அணியை சிறப்பாக வழிநடத்தி வருகின்றார்.

ஸ்ரேயாஸ் ஐயர் கொல்கத்த அணியின் தலைவராக இருந்தபோது, ​​சந்திரகாந்த் பண்டிட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றினார்.

இந்நிலையிலேயே, ஐயரை விடுவிக்க கொல்கத்தா நிர்வாகம் ஏன் முடிவு செய்தது என்பதை பண்டிட் வெளிப்படுத்தியுள்ளார்.

“துரதிர்ஷ்டவசமாக, எங்களால் ஸ்ரேயாஸ் ஐயரை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. ஸ்ரேயாஸ் ஒரு அற்புதமான வீரர், அவர் தலைவராக எங்களுக்குக் கிண்ணத்தை வென்று கொடுத்தார்.

அவர் அணியைக் கையாண்ட விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஆனால் சில சமயங்களில், சில சூழ்நிலைகள் எழுகின்றன மற்றும் எதிர்காலத் திட்டங்கள் அத்தகைய வீரர்களைக் கைவிட உங்களைக் கட்டாயப்படுத்தும் என சந்திரகாந்த் பண்டிட் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )