சட்டவிரோதமான முறையில் பாகங்கள் இணைப்பு – 20 சொகுசு வாகனங்களுடன் மூவர் கைது

சட்டவிரோதமான முறையில் பாகங்கள் இணைப்பு – 20 சொகுசு வாகனங்களுடன் மூவர் கைது

சட்டவிரோதமான முறையில் பாகங்களை இணைத்து தயாரிக்கப்பட்ட 20 சொகுசு வாகனங்களுடன் மூன்று சந்தேக நபர்களை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறான சட்டவிரோத வாகனங்கள் திட்டமிட்ட குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், இந்த வாகனங்களை சட்டவிரோதமாக பொருத்துவதற்கு பொலிஸார் மற்றும் முப்படையினரின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடவத்த , கம்பஹா மற்றும் ஜா-எல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கடவத்த, மீகஹவத்த மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் இருந்து இந்த வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதில் சொகுசு கார்கள், ஜீப் ரக வாகனங்கள், வேன்கள், லொரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளடங்குகின்றன.

இது போன்ற மேலும் சுமார் 40 சட்டவிரோத வாகனங்கள் தொடர்பான தகவல்களும் தற்போது கண்டறியப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கான அறிவித்தல்: தமது வாகனங்கள் திருடப்பட்டிருந்தாலோ அல்லது காணாமல் போயிருந்தாலோ, அது குறித்த தகவல்களை வழங்க 011-2947780 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொள்ளுமாறு மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அந்தந்தப் பகுதி நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )